சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
2.027
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு பண் - இந்தளம் (இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) நீலாசலநாதர் நீலாம்பிகையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=_RLOwoMa06k |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
2.027  
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு
பண் - இந்தளம் (திருத்தலம் இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்) ; (திருத்தலம் அருள்தரு நீலாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு நீலாசலநாதர் திருவடிகள் போற்றி )
குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து இலகு மான் மழு ஏந்தும் அம் கையன், நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து உலவினான், அடி உள்க, நல்குமே. | [1] |
குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர் இறைவன், இந்திரநீலப்பர்ப்பதத்து உறைவினான்தனை ஓதி உய்ம்மினே! | [2] |
என் பொன்! என் மணி! என்ன ஏத்துவார் நம்பன், நால்மறை பாடு நாவினான், இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே! | [3] |
நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்; தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம் ஈசன், இந்திரநீலப்பர்ப்பதம் கூசி வாழ்த்துதும், குணம் அது ஆகவே. | [4] |
மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப் பரவுவார் வினை தீர்த்த பண்பினான், இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து அருவி சூடிடும் அடிகள் வண்ணமே! | [5] |
வெண்நிலாமதி சூடும் வேணியன், எண்ணிலார் மதில் எய்த வில்லினன், அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே. | [6] |
கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர், பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர், அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம் உடைய வாணர், உகந்த கொள்கையே! | [7] |
எடுத்த வல் அரக்கன் கரம்புயம் அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட் படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம் முடித்தலம் உற, முயலும், இன்பமே! | [8] |
பூவினானொடு மாலும் போற்றுஉறும் தேவன் இந்திர நீலப்பர்ப்பதம் பாவியாது எழுவாரைத் தம் வினை கோவியா வரும்; கொல்லும், கூற்றமே. | [9] |
கட்டர்குண்டு அமண், தேரர், சீர் இலர், விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம், எள் தனை நினையாதது என்கொலோ, சிட்டுஅதுஆய் உறை ஆதி சீர்களே? | [10] |
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான், இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து அந்தம் இலியை ஏத்து ஞானசம் பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே! | [11] |